
மௌனத்தை வைத்துக் கொண்டு திரிகிறேன்
வாங்குவதற்கு ஆளில்லாமல்
வீசியெறிந்தால்
மீண்டும் சட்டைப்பையில் உட்கார்ந்து கொள்கிறது
எரித்துவிட முயல்கிறேன்
ஏழுகடலும் சூழ்ந்து கொண்டால் என்ன செய்வேன்?
புதைத்துவிட்டு உட்கார்ந்தேன்
புற்கள் கருகிப் புகலிடமற்ற பிணமெழுந்தது
எங்குப் பார்த்தாலும் மௌனம் கலைத்த சடாயுக்கள்
எல்லோரும்
எதையோ தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்
வேறுவழியில்லை
தேநீர் கோப்பையில் நிரப்பி வைத்திருக்கிறேன்
விஷமாவதற்கு முன் அருந்திவிடல் நலம்
மௌனம் விற்பனைக்குமல்ல
விடிந்தெழுந்தால் தெரியும் மௌனம் இறந்திருக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
26 /06 /2018
No comments:
Post a Comment