ரமலான் 29

எல்லாம் முடிந்து விடுகிறது
ஏதோவொன்று
நம்மை விட்டும் கடந்தும் விடுகிறது
அறிவின் கதவுகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன
காட்சிகளின் பிழைகளில்தான்
கனாக்களை விரிக்கிறோம்
நபி நூஹூவின் கப்பலில் ஏறாதவன்
பெரும் வெள்ளத்தில் மூழ்குகிறான்
சிலந்தி வலையின் ஆற்றல்
சிந்தனைகளின் பின்னல்
தேனீக்களிடம் யார் பாடம் கற்றது?
வெட்டுக்கிளிகளுக்கு
போர்த் தந்திரம் யார் சொல்லித் தந்தது?
வேர்களைப் பற்றிச் சிந்திக்காதவன்
நிழலில் நிற்க அருகதையற்றவன்
கோடாரியைக் கண்டு வியக்கிறவன்
காம்பை
கையில்தான் பிடித்திருக்கிறான்
மழையென்பது
மண்ணிலிருந்துதான் புறப்படுகிறது
ஆனாலும்
மேகத்தைப் பார்த்துத்தான் வியக்கிறோம்
அறிவின் கதவுகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன
கல்வியென்பதே சிந்திப்பது மட்டும்தான்.
- மு.முகமது பாட்சா*
14 /06 /2018

எல்லாம் முடிந்து விடுகிறது
ஏதோவொன்று
நம்மை விட்டும் கடந்தும் விடுகிறது
அறிவின் கதவுகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன
காட்சிகளின் பிழைகளில்தான்
கனாக்களை விரிக்கிறோம்
நபி நூஹூவின் கப்பலில் ஏறாதவன்
பெரும் வெள்ளத்தில் மூழ்குகிறான்
சிலந்தி வலையின் ஆற்றல்
சிந்தனைகளின் பின்னல்
தேனீக்களிடம் யார் பாடம் கற்றது?
வெட்டுக்கிளிகளுக்கு
போர்த் தந்திரம் யார் சொல்லித் தந்தது?
வேர்களைப் பற்றிச் சிந்திக்காதவன்
நிழலில் நிற்க அருகதையற்றவன்
கோடாரியைக் கண்டு வியக்கிறவன்
காம்பை
கையில்தான் பிடித்திருக்கிறான்
மழையென்பது
மண்ணிலிருந்துதான் புறப்படுகிறது
ஆனாலும்
மேகத்தைப் பார்த்துத்தான் வியக்கிறோம்
அறிவின் கதவுகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன
கல்வியென்பதே சிந்திப்பது மட்டும்தான்.
- மு.முகமது பாட்சா*
14 /06 /2018
No comments:
Post a Comment