
ஸ்வாமி என்றவளின் வாரிசு
கணவனை,' பிராண நாதா!' என்றால்
நகர நகர அத்தானென்றவள்
ஏங்க என்பதையும் எரிந்துவிட்டு
ஏன்டா என்கிறாள்
இப்போதுதான்
அவன் மிக நெருக்கமாகவே இருக்கிறான்
ஆண்டவனே கூட
அவன் இவனென்பதில்தான்
ஆசைப்படுகிறான்
ஒருமை விளிப்பொன்றும் ஒவ்வாததல்ல
மரியாதையுடன் காலடியில் கிடந்தால்
மதிப்பிற்கு வாரிசேது?
பெயரென்பதே விளிப்பதற்குத்தான்
அடையாளத்தை அவதாரமாக்கிவிட்டால்
ஆண்டவனுக்கு என்ன வேலை?
கொஞ்சும் போதும்
திட்டிக் கொள்வது பாவமில்லை
நீ, வா ,போ ஒன்றும்
மோசமான வார்த்தைகளுமில்லை
குடும்பத்தைக் கோவிலாக்க வேண்டாம்
பாசம் மட்டும்
பத்திரமாக இருந்தாலே போதும்.
ஏன்டா ஏன்டீ கூட இனிப்பாகவேயிருக்கும்.
- மு.முகமது பாட்சா*
20 /06 /2018
No comments:
Post a Comment