Monday, 11 June 2018

ஓதுவீராக!

ரமலான் 26 
தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓதுவீராக! 
இறைமறைத் தந்த இனிய இரவின் 
முதல் அழைப்பு 

ஜிப்ரில் அலையின் முதல் அணைப்பு 

எழுத்துகளை அறியாத எங்கள் நபி(ஸல்) 
ஓதுகிறார் 

வாசிக்கச் சொல்லுகிறான் இறைவன் 
பகுத்தறிவு 
அங்குதான் பட்டைத் தீட்டப்படுகிறது 

சந்தைகளிலிருந்து 
வீடு திரும்புகிறார்கள் பெண்கள் 

மதுக்குடங்கள் 
உடைக்கப் படுகின்றன வீதிகளில் 

அடிமைகளின் சங்கிலி அறுக்கப்பட்டது 

குறைஷிகளின் தோள்களில் 
கறுப்பர்களும் கை போட்டு நடக்கலாம் 

பூசனைகள் வெட்கப்படுகின்றன 
காலில் விழுவது கடைசியாகிப்போனது 

வணக்கமென்பது இறைவனுக்கு மட்டுமே 
வாழ்த்துகள் சக மனிதர்களுக்கு 

தர்மம் கட்டாயம் 
தானம் முக்கியம் 
வட்டியென்பது அறவே கிடையாது 

பகிர்துண்ணாதவன் பாவியானான் 

வியர்வை விழும் முன் 
கூலிகள் கிடைத்தன 

பிலால் (கறுப்பர்) தான் பாங்கு சொன்னார் 

யாருமிங்கே தொழ வைக்கலாம் 
தொழுகையிலும் தோளுரச வேண்டும் 

நறுமணக் காற்றின் முதல் வசந்தத்தை 
இந்த இரவுதான் சுமந்து வந்தது 

ஓதுவீராக! 
இறைமறைத் தந்த இனிய இரவின் 
முதல் அழைப்பு 

- மு.முகமது பாட்சா* 
11 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts