
என்னைப் பார்த்துத்தானே
எட்டு வைப்பான் சூரியனும்
அத்தனை காலையில
அடிச்சுழுத மண்ணைய்யா யிது,
நாத்து நட நான் குனிஞ்சா
நெல்லே கூட நிமிர்ந்து பார்க்கும்,
சோறுதானே நீயும் திங்கற
மாத்திரையில வாழ்ந்திடுவியா?
கால் செருப்பு போட்டாக்கூட
பூதேவிக்கு வளிக்கும்னு,
என் தோலையே
செருப்பா போட்டுகிட்டு
காயம் பட்ட பாசமய்யா! - எங்க
வியர்வை விழுந்த மண்ணு இது
தாரைக்கொட்டி நசுக்கப் பார்த்தா
நானென்ன சும்மாவா விடுவேன்?
காயம் பட்டு வாழ்ந்த உடம்பு
இந்த லட்டிக்கெல்லாம் அசராது...
கருணையிருந்தா தாயை விடு,
இல்லையென்னா
கண்ணை மூடிச் சுட்டுவிடு
பார்ப்பதற்குத் தாங்காது
பாவிமவ
இந்த மண்ணு மேல வச்ச பாசம்.
- முகமது பாட்சா*
20 /06 /2018
நண்பர் கமல் காளிதாஸ் படத்திற்கு எழுதிய கவிதை
No comments:
Post a Comment