Friday, 8 June 2018

கதம்பம்


எழுதாத வானத்தில் எழுதவரும் நிலா
கைத்தட்டும்
நட்சத்திரங்கள்!

-------------

பதுங்கிக் கிடக்கிறது உடல் 
பாய்ச்சலுக்கு 
தயாராகிவிட்டது மனம்

----------------

அழகின் பொதுமைக்குள் 
இயற்கை உறங்குகிறது
அதிகம் பீற்றிக்கொள்ளாதே

-----------------

யாரைத் தேடுகிறாய் நிலா
அவள் 
கவிதைக்குள் உறங்குகிறாள்

--------------

செடிகளை மேய்ந்துவிட்ட ஆடுகள்
நீரைத்தேடிப் பயணிக்கும் வேர்கள்

----------------

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts