Friday, 15 June 2018

பிறை பார்த்தோம்

ரமலான் 30

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு மற்றும் வானம்

பிறையை இழுத்து வந்து 
பெரு நாள் கொண்டாட முயல்கிறோம்

வரும் பிறைக்காக 
வாசல் கதவை திறந்து வைப்போம்

முப்பது நோன்புகள் முழுமை பெறட்டும்
இறைவன் கருணையே 
- சுபஹானல்லாஹ் !

மகிழ்வென்பது மனதில் பூக்கும் 
முகமன் மட்டுமே நட்பின் இலக்கணம்

ஏந்தியக் கைகளில் வெளிச்சம் நிறைக்க - 
இனிதே கூறுவோம் மாஷா அல்லாஹ் 
மகிழ்வுடன் தொழுதே

கருணைப் பூத்த மனதினிலெல்லாம் 
கள்ளிகள் பூப்பதும் நியாயமில்லை

தூய்மையான வீட்டை நாமும் 
துப்புரவாக்கித் தொடர்வதே நேசம்

கோபம் பாவம் இரண்டும் தொலைத்து 
கொடியில் பூத்த மலர்களாவோம்

வாசமென்பது நடத்தையின் பூக்கள் 
வாடிடாமல் பாதுகாப்போம்!

- மு.முகமது பாட்சா* 
15 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts