Wednesday, 13 June 2018

ஆசையினாழம் அதிகம்

ரமலான் 27

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வரைதல்

புனித இரவின் பொக்கிசங்களை 
அள்ளிக் கொண்டீர்களா?

எத்தனை நன்மைகளில் - உங்களை 
நீங்களே புதைத்து வைத்தீர்கள்?

கைகளோடு கண்களுமல்லவா 
பாவங்கள் செய்கின்றன

தொழுகையினால் மட்டுமே அவை 
தூய்மையாகி விடுமா?

ஓதி முடித்த குரானுக்குள்ளிருந்தும் 
இடம் மாறாமல் 
இன்னமும் வசனங்களிருக்கின்றன...

சூறாக்களோதிய வாய்களால்தான் 
துட்சண வார்த்தைகளையும் பொழிகிறோம்

ஆசையினாழம் அதிகமென்று தெரிந்தும் 
நீந்துவதற்கு அச்சப்படுவதில்லை

காற்று எப்போதும் 
மென்மையாகத்தான் வீசுமென்பது 
நம் கற்பனை

கறையான்களுக்கும் கூட 
நம்மை 
அபகரித்துக் கொள்ள அதிகாரமிருக்கிறது

போதையென்பது 
மூளை நரம்புகளின் முட்டாள் சினேகிதன்

புகழென்பது உச்சபட்ச செருக்கு

ஆடம்பரமென்றுமே 
அடுத்தொரு உலகத்திற்குள் நுழையமுடியாது

தர்மம் செய்தீர்களா? 
தானெமென்பதும் 
நம் கண்களின் பிரகாசம்தான்

- மு.முகமது பாட்சா* 
13 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts