ரமலான் 25

நேற்றுதான் பிறந்தது போல்
வயது ஓடிவிடுகிறது
கருவறைக்கும் மண்ணறைக்குமான
தூரம் மிகக்குறைவு
நிழல் மரணத்தின் பிரதி
காய்க்காத மரத்தை வெட்டும்போது
யாருக்கும் வலிப்பதில்லை
காரூனின் ஆடம்பரம் புதைந்தது
அவனுக்கே தெரியாது
துல்கர்ணையின்
இரும்புத்தடை இளகிவிட்டால்
எதுவுமே இங்கே இருக்கப் போவதில்லை
அவலங்களின் கூட்டணிதான்
அகிலத்தின் முடிவு நாளாகும்...
இருப்பதெல்லாம் எடுப்பதற்கு மட்டுமா?
கொடுப்பதற்கும்தான்
சகோதரனின் தோளில் சாயாதவன்
சாத்தனின்
கையைப் பிடித்து நடக்கிறான்
தாயின் காலில் சொர்க்கமிருக்கிறது
தந்தையின் அன்பில் சுவனம் மணக்கும்
பொருளோடு மட்டுமே வாழ்கிறவன்
புதைகுழியில் பிணம் மட்டுமே
திருமறையின் வாசம்
அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காது
நேற்றுதான் பிறந்தது போல்
வயது ஓடிவிடுகிறது...
மரணத்தின் வாசல் அகன்றே திறந்திருக்க
- மு.முகமது பாட்சா*
10 /06 /2018

நேற்றுதான் பிறந்தது போல்
வயது ஓடிவிடுகிறது
கருவறைக்கும் மண்ணறைக்குமான
தூரம் மிகக்குறைவு
நிழல் மரணத்தின் பிரதி
காய்க்காத மரத்தை வெட்டும்போது
யாருக்கும் வலிப்பதில்லை
காரூனின் ஆடம்பரம் புதைந்தது
அவனுக்கே தெரியாது
துல்கர்ணையின்
இரும்புத்தடை இளகிவிட்டால்
எதுவுமே இங்கே இருக்கப் போவதில்லை
அவலங்களின் கூட்டணிதான்
அகிலத்தின் முடிவு நாளாகும்...
இருப்பதெல்லாம் எடுப்பதற்கு மட்டுமா?
கொடுப்பதற்கும்தான்
சகோதரனின் தோளில் சாயாதவன்
சாத்தனின்
கையைப் பிடித்து நடக்கிறான்
தாயின் காலில் சொர்க்கமிருக்கிறது
தந்தையின் அன்பில் சுவனம் மணக்கும்
பொருளோடு மட்டுமே வாழ்கிறவன்
புதைகுழியில் பிணம் மட்டுமே
திருமறையின் வாசம்
அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காது
நேற்றுதான் பிறந்தது போல்
வயது ஓடிவிடுகிறது...
மரணத்தின் வாசல் அகன்றே திறந்திருக்க
- மு.முகமது பாட்சா*
10 /06 /2018
No comments:
Post a Comment