Friday, 29 June 2018

ஆத்மதிருப்தி

தானியங்கு மாற்று உரை இல்லை.

கனவுகளுக்குள் நுழைந்து கொள்கிறேன் 
ஆத்மதிருப்தியாய் அங்குதான் வசிக்கிறாய் 
சொல்லாத கதைகள் பேசுவது சுலபமாகிப் போகிறது 
வண்ணங்களொற்றிய உதடுகள் தேவையில்லை 
வாசனை வார்த்தைகள் போதும் 
நிழல் பிரித்து நீ கோர்த்த வார்த்தைகள் 
கவிதைகளாக்கி ஆருயிருக்குச் சமர்ப்பணம் 
நல்லவேளை 
வனத்தைக் கனவு ராஜ்ஜியத்தில் கட்டமைத்தாய் 
எட்டுவழிச்சாலைக்கு எவரும் அகழமுடியாது 
இரசாயனம் பூசிக்கொள்ள ஆலைகளில்லை 
இலையுதிர்க்கும் நீருக்கு இலக்கணப் பிழையில்லை 
இதுவுமில்லையென்றால் 
இலக்கில்லா ஞொள்ளோடு நோவு கொண்டிருப்பேன் 
வா அடுத்தக் கதை பேசுவோம்... 
விழித்தால் விழித்தழுவி கொள்ளும் கவலைகள். 

- மு.முகமது பாட்சா* 
30 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts