Sunday, 10 June 2018

உதிரிப்பூக்கள்

மக்காத குப்பைகளாக
நெகிழிக் கவிதைகள் !

------

நிழலைப் பிடித்து
விளையாடுகிறது
குருட்டுப் பூனை

---------

வண்ணங்களை எடுத்து 
பூசிக் கொள்கிறேன், 
நிலா
சிரித்துவிட்டு நகர்கிறது

---------

காற்றை பிடித்து வைத்துத் திரிகிறான்
வாங்குவதற்கு ஆளில்லை
திருவிழாவில் பலூன் வியாபாரி!

---------

கடவுள் ஊர்வலம் வருகிறார் 
தனவந்தர்களின் தாம்புல வீதியில் 
அடித்துவிரட்டுங்கள் பிச்சைக்காரர்களை 
அதோ 
அவர்களோடுதான் ஓடுகிறார் கடவுள்! 

---------

இதுவும் கடந்து போகும்
என்று சொன்னவன்
இதோ 
நம்மை கடந்து போகிறான்!

---------

மெளனத்தைக் கலைத்துவிட்டுச் செல்லும்
பறவை சொல்லிவிட்டுப் போகிறது...
"போய் உங்கள் வேலையைப் பாருங்கள்!

------------------

- முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts