மக்காத குப்பைகளாக
நெகிழிக் கவிதைகள் !
------
நிழலைப் பிடித்து
விளையாடுகிறது
குருட்டுப் பூனை
---------
வண்ணங்களை எடுத்து
பூசிக் கொள்கிறேன்,
நிலா
சிரித்துவிட்டு நகர்கிறது
---------
காற்றை பிடித்து வைத்துத் திரிகிறான்
வாங்குவதற்கு ஆளில்லை
திருவிழாவில் பலூன் வியாபாரி!
---------
கடவுள் ஊர்வலம் வருகிறார்
தனவந்தர்களின் தாம்புல வீதியில்
அடித்துவிரட்டுங்கள் பிச்சைக்காரர்களை
அதோ
அவர்களோடுதான் ஓடுகிறார் கடவுள்!
---------
இதுவும் கடந்து போகும்
என்று சொன்னவன்
இதோ
நம்மை கடந்து போகிறான்!
---------
மெளனத்தைக் கலைத்துவிட்டுச் செல்லும்
பறவை சொல்லிவிட்டுப் போகிறது...
"போய் உங்கள் வேலையைப் பாருங்கள்!
------------------
- முகமது பாட்சா
நெகிழிக் கவிதைகள் !
------
நிழலைப் பிடித்து
விளையாடுகிறது
குருட்டுப் பூனை
---------
வண்ணங்களை எடுத்து
பூசிக் கொள்கிறேன்,
நிலா
சிரித்துவிட்டு நகர்கிறது
---------
காற்றை பிடித்து வைத்துத் திரிகிறான்
வாங்குவதற்கு ஆளில்லை
திருவிழாவில் பலூன் வியாபாரி!
---------
கடவுள் ஊர்வலம் வருகிறார்
தனவந்தர்களின் தாம்புல வீதியில்
அடித்துவிரட்டுங்கள் பிச்சைக்காரர்களை
அதோ
அவர்களோடுதான் ஓடுகிறார் கடவுள்!
---------
இதுவும் கடந்து போகும்
என்று சொன்னவன்
இதோ
நம்மை கடந்து போகிறான்!
---------
மெளனத்தைக் கலைத்துவிட்டுச் செல்லும்
பறவை சொல்லிவிட்டுப் போகிறது...
"போய் உங்கள் வேலையைப் பாருங்கள்!
------------------
- முகமது பாட்சா
No comments:
Post a Comment