
செடியென்பது
இலை, தண்டு, காய், வேர், பூ
இவை மட்டுமல்ல
பல சிற்றுயிர்களின் வீடும் கூட
மலர்களின் வாசமென்பது
மண்ணின் வாசனையும் சேர்ந்துதான்
நிழலென்பது வெற்றுப் பிரதி
ஆனாலும் அதுதான்
நிஜத்தை அடையாளம் காட்டுகிறது
சிறகுகளிருந்தால் பறவை
கற்பனையில் நடப்பவன்
கனவில் மட்டும் வாழ்கிறான்
வாசிப்பில்லாதன் வசிப்பிடமில்லாதவன்
வசந்தமென்பது
பார்வையின் கோளாறு
வாசலென்பது வருகையின் பதிவேடு
மனிதமென்பது
மனதினில் வரும் வாசம்
நோயுற்றவன்
உறவுகளை என்றும் நேசிக்காதவன்
செடியென்பது
பல சிற்றுயிர்களின் அழகிய வீடு.
- மு.முகமது பாட்சா*
26 /06 /2018
No comments:
Post a Comment