நுண்புனை கதைகள் 1

அந்த சிகரெட் துண்டு இன்னமும் புகைந்து கொண்டேயிருந்தது,
சற்று முன்தான் இந்த வழியாக ஓர் ஆம்புலன்ஸ் சென்றது...
அதிலேற்றபட்டவன் சற்று முன்தான் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.
அவன் வாங்கிய சிகரெட் பெட்டியில் அந்தச் சிகரெட்டின் வாசம்
இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது.
அந்தப் பெட்டியினோரத்தில் ஒரு வாசகம் இவ்வாறு
சிறிதாக அச்சிடப்பட்டிருந்தது, 'புகை பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது'
அங்கிருந்த பெட்டிக்கடைக்காரர் ,'என்னன்னு தெரியலை
திடீர்ன்னு மயக்கம் போட்டு வுழுந்துட்டான்' என்று சொல்லி வருத்தப் பட்டார்.
'தண்ணி போட்டிருப்பான்' என்று சொன்ன வழிப் போக்கன் ,
'சரி சிகரெட் ஒண்ணு கொடு' என்று வாங்கி அங்கேயே பற்ற வைத்தான்.
பற்ற வைத்த கயிறு மெல்ல எரிந்து கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
21 /06 /2018

அந்த சிகரெட் துண்டு இன்னமும் புகைந்து கொண்டேயிருந்தது,
சற்று முன்தான் இந்த வழியாக ஓர் ஆம்புலன்ஸ் சென்றது...
அதிலேற்றபட்டவன் சற்று முன்தான் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.
அவன் வாங்கிய சிகரெட் பெட்டியில் அந்தச் சிகரெட்டின் வாசம்
இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது.
அந்தப் பெட்டியினோரத்தில் ஒரு வாசகம் இவ்வாறு
சிறிதாக அச்சிடப்பட்டிருந்தது, 'புகை பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது'
அங்கிருந்த பெட்டிக்கடைக்காரர் ,'என்னன்னு தெரியலை
திடீர்ன்னு மயக்கம் போட்டு வுழுந்துட்டான்' என்று சொல்லி வருத்தப் பட்டார்.
'தண்ணி போட்டிருப்பான்' என்று சொன்ன வழிப் போக்கன் ,
'சரி சிகரெட் ஒண்ணு கொடு' என்று வாங்கி அங்கேயே பற்ற வைத்தான்.
பற்ற வைத்த கயிறு மெல்ல எரிந்து கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
21 /06 /2018
No comments:
Post a Comment