
காகிகத்தின் பக்கம்
காலியாகவே இருக்கிறது
செய்திகளின் உள்ளடக்கத்தை
அவரவர்களே நிரப்பிக் கொள்ளுங்கள்
சப்தமிட்டு எதையும் வாசிக்காதீர்கள்
காகிதம் மௌனத்தை நேசிக்கிறது
காகிதத்திற்குப் பயமில்லை
எழுத்துகள்தான் எங்கேயோ
அச்சப்பட்டு ஒளிந்திருக்கின்றன
காகிதத்தின் முனைகள்
கூர்மையாகவே இருக்கின்றன
விழிப்புடன் இருத்தல் நலம்
நுட்பப்பிரிவு ஆடிகளைக் கொண்டு
அளந்து கொண்டிருக்கிறது
தீவிரவாதிகள்
காகிதத்துள் பதுங்கியிருக்கலாம்
காலியாக இருப்பது கூட
அரசின் பார்வையில்
கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைதான்.
- மு.முகமது பாட்சா*
19/06/2018
No comments:
Post a Comment