ரமலான் 28

இரண்டொரு நாட்களில்
இனிதொரு குதுகலம் எட்டிப் பார்க்கும்
உறவுகளின் கைகள்
உரிமையுடன் இறுக்கம் சேர்க்கும்
தோள்களனைத்து
வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வோம்
அதற்குமுன்
'சகாத் அல் பித்ர்' நம் கடமையல்லவா
நோன்பின் நன்மைகளுக்கு
புன்னகை வரையும் அழகிய தர்மம்
எல்லோருக்கும் இது கட்டாயம்
இல்லையென்று சொல்ல
என்னிடம்
எதுவும் இல்லையென்று சொல்லாதே
இருப்பதிலிருந்தும் கொடுப்பதுதானே
சகாத் அல் பித்ர்
கையளவில் அள்ளிச் செய்யும்
கன்னியமிக்க தர்மமிது
ஈகையின் திருநாளுக்கு முன்பே
இனிதாய் கொடுத்திடுவோம்
ஏழைகளுக்கும் இனிய பெரு நாள்
தடையின்றி நடக்கட்டுமே
கருணையின் நிழல் எப்போதும்
நம் கையோடுவே இருக்கிறது
வாழ்த்துகள் வளம் பெறுவது
தர்மத்தின் வாசல்களில் மட்டும்தான்.
- மு.முகமது பாட்சா*
13 /06 /2018
(சகாத் அல் பித்ர் :
நோன்பு நோற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையான தர்மமாகும் ஒரு நபர் செய்யும் தர்மத்தின் அளவு
2 .3 கிலோ கிராம் தானியமாகும். நாம் என்ன தானியம்
உபயோகம் செய்கிறோமோ அதே குணமிக்கத் தானியத்தையோ
அல்லது அதனளவு பணத்தையோ
பெரு நாள் தொழுகைக்கு முன்பாக ஒரே ஏழைக்கு அளிக்க வேண்டும்.
வீட்டிலுள்ள ஒவ்வொருக்குமே இது கடமையாகும் )

இரண்டொரு நாட்களில்
இனிதொரு குதுகலம் எட்டிப் பார்க்கும்
உறவுகளின் கைகள்
உரிமையுடன் இறுக்கம் சேர்க்கும்
தோள்களனைத்து
வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வோம்
அதற்குமுன்
'சகாத் அல் பித்ர்' நம் கடமையல்லவா
நோன்பின் நன்மைகளுக்கு
புன்னகை வரையும் அழகிய தர்மம்
எல்லோருக்கும் இது கட்டாயம்
இல்லையென்று சொல்ல
என்னிடம்
எதுவும் இல்லையென்று சொல்லாதே
இருப்பதிலிருந்தும் கொடுப்பதுதானே
சகாத் அல் பித்ர்
கையளவில் அள்ளிச் செய்யும்
கன்னியமிக்க தர்மமிது
ஈகையின் திருநாளுக்கு முன்பே
இனிதாய் கொடுத்திடுவோம்
ஏழைகளுக்கும் இனிய பெரு நாள்
தடையின்றி நடக்கட்டுமே
கருணையின் நிழல் எப்போதும்
நம் கையோடுவே இருக்கிறது
வாழ்த்துகள் வளம் பெறுவது
தர்மத்தின் வாசல்களில் மட்டும்தான்.
- மு.முகமது பாட்சா*
13 /06 /2018
(சகாத் அல் பித்ர் :
நோன்பு நோற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையான தர்மமாகும் ஒரு நபர் செய்யும் தர்மத்தின் அளவு
2 .3 கிலோ கிராம் தானியமாகும். நாம் என்ன தானியம்
உபயோகம் செய்கிறோமோ அதே குணமிக்கத் தானியத்தையோ
அல்லது அதனளவு பணத்தையோ
பெரு நாள் தொழுகைக்கு முன்பாக ஒரே ஏழைக்கு அளிக்க வேண்டும்.
வீட்டிலுள்ள ஒவ்வொருக்குமே இது கடமையாகும் )
No comments:
Post a Comment