Monday, 8 January 2018

கனி விற்பவள்



குடும்பத்தை 
கூடையில் சுமந்துத் திரிகிறவள்... 
பதனிழந்தக் கணவனையும் 
பரிசுகளான பிள்ளைகளையும் 

நளாயினியாக இருக்க வாய்ப்பில்லை?  
கதைகளில் மட்டுமே வாழ்கிறவள், 
இவள் கண்முன்னேத் திரிகிறாள்,
.  
தொடருந்து வண்டிகளிலும் 
ஆலயங்களின் வாசல்களிலும்...

கடவுளை நிந்தித்தவளாக.......
காணும் இவள் 
கனிகளை விற்றுக் கொண்டிருப்பாள் 

மு.முகமது பாட்சா*
08/01/2016

No comments:

Post a Comment

Popular Posts