
பறந்து போகின்ற பட்டாம் பூச்சிகள்
சிதறி விட்டுப் போகிறது
வார்த்தைகளை...
.
சேர்த்தெடுத்து
கவிதைகள் வடிக்கலாம்
வா!
.
காதல் பறவைகளின் சிறகுகளில்
உன் வண்ணங்கள்
ஒட்டிக் கொண்டால்.....
.
வான வில்லிற்கு
யார் நிறம் கூட்டுவது ?
.
மின்மினிப் பூச்சிகளே....
நீங்கள் பச்சைச் சேலைகளுக்குள்
பதுங்கிக் கொள்ளாதீர்...
.
தவளைக் கூட்டங்கள்
இருளில் தவிக்கின்றன!
- மு.முகமதுபாட்சா*
12/01/2016 மீள்
No comments:
Post a Comment