Saturday, 10 February 2018

பூனைகள் வெளிவந்தன

தானியங்கு மாற்று உரை இல்லை.

பூனைகள் வெளிவந்துவிட்டதாகச் சொல்கிறார்கள், 
பூட்டி வைத்த இரகசியங்கள் 
இப்போதுதான் வெளியே வந்து மெல்ல எட்டிப் பார்க்கிறது , 
மருத்துவமனை ஆயுதங்களையும் 
கொலை செய்வதற்குக் கூடப் பயன் படுத்தலாம் . 
தடாகங்களைச் சுத்தம் செய்யும் மீன்களை 
தோட்டிகளென்று யாரும் ஒதுக்கிவிடுவதில்லை ! 
இராட்சச நாக்குகள் நீட்டிப் பார்க்கும் இடத்தில் 
உட்கார்ந்து கொண்டுதான் 
மக்கள் அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள் ! 
வேட்டைத் தொழிலை விட்ட இனக்குழுவிற்கு 
அரசியல் தொழிலும் பழகி விடுகிறது ! 
மதுவின் கோப்பையில் விழுந்த ஈக்களும் 
மரணிக்கத்தான் போகின்றன , 
ஆனாலும் ஆசை யாரை விட்டது, 
சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் 
மோதிக் கொள்ளும் பூமியில் மட்டுமே 
சிக்கிச் சிதறுகிறார்கள் மனிதர்கள் ! 
முடிச்சுகள் இல்லாத கவிதையென்றே தோன்றும் 
எங்கோ ஒரு முடிச்சு 
எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டுதான் நகர்கிறது !

- மு.முகமதுபாட்சா*

10/02/2017

No comments:

Post a Comment

Popular Posts