
மூதேவிக்கு
முகம் முழுக்க மேக்கப் போட்டும்
சீதேவி மாதிரி ஆகலேன்னு
வருத்தமாவேயிருக்கு ,
இதழ்கடையில் வழிஞ்ச
இரத்தத்தையெடுத்து
உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்கிறாள்,
சூலமும் , அருவாளையும்
ஆயுதமாகத் தாங்கிக் கொண்டு,
கைகளை மேலுயர்த்தி
கடாட்சம் காட்டுகிறாள்,
இவள்தான் நெசமான சீதேவின்னு
மூதேவி பிள்ளைகள் முழக்கம் செய்ய
மூதேவிக்கும்
சீதேவி கலை வந்துட்டதாகவே நெனப்பு .
பாடைகட்டி
ஊர்வலம் போகும் அந்த பன்னாடைக்கு,
சுத்தியடிக்கும் ஊத்த நாத்தம்
சுத்தாமத் தெரியலை....
என்ன சொல்ல
தேவலோகம் கொழம்பித்தான் போனதா
நெனைச்சிகிட்டு
மூதேவி, ஊர் முழுக்க
மொழக்கம் செஞ்சிகிட்டே திரியுது
தான்தான் சீதேவின்னு.
- மு.முகமதுபாட்சா*
13/02/2017
No comments:
Post a Comment