Monday, 19 February 2018

சொல் வனம்




திடமிழந்து அலைந்தாடும் 
மனதின் அலைகளின் ஓரத்தில் 
அசைந்தாடும் 
அந்த ஒற்றைப் படகினில்தான் 
அலை மோதும் காற்றின் இடையேயும் 
ஒரு சிறு வெளிச்சமாய் 
என் வாழ்க்கை 
அணைவதும் அணையாததுமாய் 
காற்றின் நிலைப் பாட்டில்! 

...................................................................

போதி மரத்தின் கீழ்தான்
சிற்றெறும்புகளின் ஊர்வலம்
சித்தார்த்தன் இடம் மாறினான்!
----------------------------------------------------------

எழுத்துகளுக்கும் வாசனையிருப்பது
தெரியுமா உங்களுக்கு ?
அவள் அப்படிதான் சொல்கிறாள்!
...........................................................................

வார்த்தைகளை மறைத்து வைத்துக் கொண்டு 
கவிதையில் பிழை காண்கிறாள், 
கண்களில் தேடிக் கொண்டிருக்கிறேன் 
முழுமையான கவிதை வடிக்க !

------------------------------------------------------------------

தடுக்கி விழுந்த 
வார்த்தைகளில்தான்
அவளின் சிரிப்பு 
ஒளிந்திருந்தது !

----------------------------------------------------------------------

- மு. முகமதுபாட்சா*

19/02/2016

No comments:

Post a Comment

Popular Posts