Monday, 12 February 2018

காதலெனும்...


தானியங்கு மாற்று உரை இல்லை.

மனப் பிரளயத்தின் 
நடுவே 
இருப்பதாய்த் தோன்றுவதும் 
இல்லாதா ஒன்றாகி 
இல்லாத ஒன்றும் 
இருப்பதாய் நிலை மாறும் 
அந்த ஒன்றைத்தான் 
ஒருவன் கடவுள் என்கிறான்! 
மற்றவன் காதல் என்கிறான்! 

    000

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


ரோஜாவாகவோ 
சிகப்பு நிறச் சாட்டினில் 
பொதியப்பட்ட இதயமாகவோ 
இருக்க வாய்ப்பேயில்லை! 
மஜ்னூவின் 
ஒருமித்த சிந்தனையின் 
அலைச்சல்களாகவும் 
ஷாஜஹானின் நரைத்தத் 
தலைமுடியாகவும் இருக்கலாம்! 
தனிமையின் மயக்கத்தில் 
புன்னகை வரையும் 
தூரிகையாகவும் 
ஏன் இருக்கக் கூடாது? 

.....மு.முகமதுபாட்சா*

13/02/2016

No comments:

Post a Comment

Popular Posts