Saturday, 10 February 2018

கால் போத்த சாராயம்


தானியங்கு மாற்று உரை இல்லை.

கணவன் : 
சொல்லாத சொல்லுக்கெல்லாம் 
சொக்கட்டான் ஆடுறயே... 
சோத்துப் பானக் கவுந்துப் போனா 
வவுத்துப் பானக் காயுமடி! 

மனைவி : 
கருத்தாதான் பேசற மச்சான் 
கணக்காதான் குடிச்சிப் போட்டு 
கல்யாண வயசுலதான் , பொண்ணு 
காத்துக் கெடப்பது தெரியாம?

கணவன் : 
கால் போத்தச் சாராயம் 
கஷ்டத்தில நான் குடிச்சேன் 
துஷ்ட சக்திச் சூழ்ந்திருக்கு ,நாம 
துக்கத்தைத் தான் தூக்கிச் சுமக்க! 

மனைவி : 
குடிச்சழிச்சக் காச யெல்லாம் 
சேத்துவச்சிப் பாத்திருந்தா 
சொக்கத் தங்கம் சேர்ந்திருக்கும் 
சோத்து ருசிக் கூடி யிருக்கும்!

கணவன் : 
வாத்தியாரு மவளாத் தான் 
வக்கனையாப் பேசற நீ! 
கவர்ன்மெண்ட்டுக் கடையால, நான் 
கண்ணழிஞ்சிப் போனேன்டி!

மகள் : 
காசு வாங்கி ஓட்டுப் போட்டா 
தறுதலைத் தானே ஆட்சிச் செய்யும்.. நீங்க 
சண்டப் போட்டு என்ன செய்ய, இனி 
சூதானமா இருக்க வோணும்! 

- மு.முகமதுபாட்சா* 
10/02/2016

No comments:

Post a Comment

Popular Posts