பறவை காத்திருக்கிறது - ரமலான்_11

பறவைகள் கூடடையும் நேரம்
பறவை குஞ்சுகள்
சந்தோஷமாகக் காத்திருக்கின்றன
தாயின் வருகைக்காக...
வானம் குளுமையைப் போர்த்துகிறது
மேகங்கள் மினாராவைத் தொட்டு
முத்தமிடத் துடிக்கின்றன...
இரவின் வாசம் மெல்ல எட்டிப் பார்க்கிறது...
அங்கசுத்தி செய்யுமோசையும் இசைதான்
ஒழுக்கம் தாளலயம்...
நோன்பின் கஞ்சி சுவனத்தின் வசந்தம்...
பேரீத்தம் தரும் பெரும் இன்பம்...
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து
வஅலைக தவக்கல்து
வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
யா அல்லாஹ்! உனக்காகவே
நோன்பு வைத்தேன்,
உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன்,
உன் மீதே நம்பிக்கை வைத்தேன்,
உன்னுடைய இரணம் கொண்டே
நோன்பு திறக்கின்றேன்
என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
புறாக்களின் சடசட ஓசையோடு இறையழைப்பு
'அல்லாஹூ அக்பர்'
பறவை காத்திருக்கிறது
தன் குஞ்சுகளின் பெரும் வருகைக்காக...
பள்ளிவாசல் வெளிச்சம் பெறுகிறது.
- மு. முகமது பாட்சா*
17/05/2019

பறவைகள் கூடடையும் நேரம்
பறவை குஞ்சுகள்
சந்தோஷமாகக் காத்திருக்கின்றன
தாயின் வருகைக்காக...
வானம் குளுமையைப் போர்த்துகிறது
மேகங்கள் மினாராவைத் தொட்டு
முத்தமிடத் துடிக்கின்றன...
இரவின் வாசம் மெல்ல எட்டிப் பார்க்கிறது...
அங்கசுத்தி செய்யுமோசையும் இசைதான்
ஒழுக்கம் தாளலயம்...
நோன்பின் கஞ்சி சுவனத்தின் வசந்தம்...
பேரீத்தம் தரும் பெரும் இன்பம்...
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து
வஅலைக தவக்கல்து
வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
யா அல்லாஹ்! உனக்காகவே
நோன்பு வைத்தேன்,
உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன்,
உன் மீதே நம்பிக்கை வைத்தேன்,
உன்னுடைய இரணம் கொண்டே
நோன்பு திறக்கின்றேன்
என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
புறாக்களின் சடசட ஓசையோடு இறையழைப்பு
'அல்லாஹூ அக்பர்'
பறவை காத்திருக்கிறது
தன் குஞ்சுகளின் பெரும் வருகைக்காக...
பள்ளிவாசல் வெளிச்சம் பெறுகிறது.
- மு. முகமது பாட்சா*
17/05/2019
No comments:
Post a Comment