Wednesday, 15 May 2019

நான் நரியாக மாறவேண்டும்


அணிலாகத்தான் 
அஃது என்னருகில் வந்தது 
அதனைத் தடவிக் கொடுத்தேன் 
அதன் பற்கள் 
என்னைப் பிறாண்டிப் பார்த்தன 
இப்போது அஃதொரு கடுவனாக இருந்தது 
அதன் கால் நகங்கள் 
சில ஆயுதங்களை 
ஒளித்து வைத்திருந்தன... 
அஃதொரு புலியாக மாறும் முன் 
வீசிவிடத் துணிந்தேன் 
ஆனால் அஃது இப்போது 
நாயாக நின்று கொண்டிருந்தது... 
நன்றியுள்ளதென்று 
போவோரெல்லாம் புகழ்ந்தார்கள் 
அதன் எச்சில் 
இப்போது உதிரத்தைச் சுழற்றியது... 
வேறு வழியில்லை... 
இப்போது நானும் 
ஒரு நரியாகவாவது மாறவேண்டும்... 
இல்லையென்றால் அஃதடுத்து 
ஒரு பாம்பாக மாறக்கூடும்.

- மு.முகமது பாட்சா*
15/05/2019

No comments:

Post a Comment

Popular Posts