Tuesday, 14 May 2019

ஹசன் பாஸ்ரி - ரமலான் 9

ஹசன் பாஸ்ரி - ரமலான் 9

நான் எங்கே 
நடந்து போகிறேன் தெரியுமா? 
எங்கே? என்று கேட்டான் வழிப் போக்கன் 
கபர்ஸ்தான் 
என்று அதிர வைத்தார் ஹஸன் பாஸ்ரி... 
எதற்காக ஓடுகிறீர்கள்? 
அஃது உனக்காகக் காத்திருக்கும் என்று 
மண்ணறையைக் காட்டுகிறார் 
ஞானம் இறைவன் தந்ததா? 
எனக்கேட்டான் வழிப்போக்கன் 
சிறுவனும் கூட அந்த வாசலைத் 
திறந்து வைப்பானே என்றார் ஹசன் பாஸ்ரி 
எப்படி? 
இதோ அவரே எழுதிய கவிதை:

'சிறுவன் 
விளக்கோடு வந்தான் 
ஒளியை 
எங்கிருந்து பெற்றாய் எனக் கேட்டேன் 
சிரித்த அவன் 
விளக்கை அணைத்துவிட்டு 
ஒளி 
இப்போது எங்கே போயிற்றோ 
அங்கே இருந்துதான் என்றான்.'

- மு.முகமது பாட்சா*
15/05/2019

No comments:

Post a Comment

Popular Posts