
இப்போதெல்லாம்
ஆளுக்கொரு துப்பாக்கியோடு திரிகிறார்கள்
சட்டைப் பையில் தேசியக் கொடியும்
தொப்பைப் பையில்
சாராயமும் நிறைந்திருக்கிறது...
சாத்தான்களுக்கு எட்டுக் காலப் பூசைகள்...
சாமியர்களின் மடியில் வைப்பாட்டிகள்..
கடவுளர்களின் சன்னிதானங்களில்
பிரார்த்தனைகள் மட்டுமே
கைகளேந்தி மிச்சமாய் நிற்கின்றன...
சாதாரணன்
சாத்திரங்களுக்குள் நுழைவதில்லை...
சத்தியம் மட்டுமே தேவதேவன்...
அச்சம் உச்சியில் நின்று பறக்கிறது
எலிகளின் வீரம் கூட இல்லையென்றால்
பூனையாக வாழ்வதிலும் புண்ணியமில்லை...
நிம்மதி என்பது இனிய சுவாசம்
மூச்சுத் திணறும்போது முக்காடுகள் எதற்கு?
கத்தியொன்றாவது
இனி நம் கையிருப்பில் இருக்கட்டும்.
- மு.முகமது பாட்சா*
16/05/2019
No comments:
Post a Comment