ஜக்காத் - ரமலான் 20

கைகளை ஏந்தி நிற்கிறது கருணை
விரல்களை இறுக மூடிக் கொள்ளாதீர்கள்...
காரூணின் கஜானாக்கள்
கர்வத்தில் புதைந்து கிடக்கின்றன...
ரலி அபூக்கரின் கரங்களை
முத்தமிடத் துடித்தது ரசூலின் அதரங்கள்...
நாற்பதில் ஒன்றுதானே கடமை
அதற்கும் கூட நாய்ப் பட்ட ஆசை ஏன்?
வியர்வை விழுமுன் கொடுத்தால் கூலி
கண்ணீர் விழுந்த பின் கொடுத்தால்
பாவத்தின் சம்பளம்...
மறுமையென்பது
மகஷருக்குப் பிறகே இருக்கட்டும்
உன் கருணையைத் தொலைத்துவிட்டால்
இம்மைக்கே இங்கு இழுபறி...
கொடுத்தவர்கள்
வெறும் கையுடன் திரும்புவதில்லை...
துவாக்களுடன் இறையின்
புன்னகையையும் ஏந்திக் கொள்கிறார்கள்.
சுஜூதுவின் தழும்புகளுக்கு ஒளி
சும்மா வந்துவிடுமா?....
சுட்டெரிக்கும் மகஷருக்கும் மேகம் அதுதானே!..
தர்மம் என்பதைச் செய்யும் போது செய்...
ஜக்காத் என்பது இறைவனின் கொடை
இடை நிறுத்திக் கொண்டால் எல்லாம்
கூடிவிடும் என்பது தப்புக் கணக்கு...
நிழலுக்கு மறை வழி சொல்கிறது
இன்னலுக்கு நீயொரு புதுக் கதை எழுதாதே!
- மு.முகமது பாட்சா*
28/05/2019

கைகளை ஏந்தி நிற்கிறது கருணை
விரல்களை இறுக மூடிக் கொள்ளாதீர்கள்...
காரூணின் கஜானாக்கள்
கர்வத்தில் புதைந்து கிடக்கின்றன...
ரலி அபூக்கரின் கரங்களை
முத்தமிடத் துடித்தது ரசூலின் அதரங்கள்...
நாற்பதில் ஒன்றுதானே கடமை
அதற்கும் கூட நாய்ப் பட்ட ஆசை ஏன்?
வியர்வை விழுமுன் கொடுத்தால் கூலி
கண்ணீர் விழுந்த பின் கொடுத்தால்
பாவத்தின் சம்பளம்...
மறுமையென்பது
மகஷருக்குப் பிறகே இருக்கட்டும்
உன் கருணையைத் தொலைத்துவிட்டால்
இம்மைக்கே இங்கு இழுபறி...
கொடுத்தவர்கள்
வெறும் கையுடன் திரும்புவதில்லை...
துவாக்களுடன் இறையின்
புன்னகையையும் ஏந்திக் கொள்கிறார்கள்.
சுஜூதுவின் தழும்புகளுக்கு ஒளி
சும்மா வந்துவிடுமா?....
சுட்டெரிக்கும் மகஷருக்கும் மேகம் அதுதானே!..
தர்மம் என்பதைச் செய்யும் போது செய்...
ஜக்காத் என்பது இறைவனின் கொடை
இடை நிறுத்திக் கொண்டால் எல்லாம்
கூடிவிடும் என்பது தப்புக் கணக்கு...
நிழலுக்கு மறை வழி சொல்கிறது
இன்னலுக்கு நீயொரு புதுக் கதை எழுதாதே!
- மு.முகமது பாட்சா*
28/05/2019
No comments:
Post a Comment