
ஒரு வரையாடு மனிதன்
என்னைக் கடந்து செல்கிறான்
அவனைச் சுற்றிலும் காட்டின் வாசம்...
கடலைத் தலையில் கவிழ்த்துச் செல்லும் விலங்கை
அதிசயமாகப் பார்க்கிறேன்
அதன் பெயர் மகரம் என்றார்கள்...
தரையில் பறந்து கொண்டிருந்தவன்
தன்னை ஒட்டகமென்று சொன்னது வியப்பு!
ஒரு காட்டெருமை உரசிவிட்டு
வருந்திவிட்டுச் சென்றது...
யானை அங்குசத்தைப் பிடித்து நடக்க
பாகன் தரையிலுருண்டு
பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்...
பகல் கனவு இப்படித்தான் இருக்குமென்று
நீங்கள் சிரிக்கிறீர்கள்...
கண்ணாடியின் முன் நின்று பாருங்கள்...
உங்கள் முன் இப்போது
நான் பூனையாக நடந்து செல்வது தெரியும்.
- மு. முகமது பாட்சா*
30/05/2019
No comments:
Post a Comment