
முதலில் இந்தக் கவிதையை
எப்படி நெய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்
அதற்கான இழைகள் நூற்பதற்கு
சில நூற்குருவிகள் தேவைப்படுகிறது...
பட்டாம் பூச்சிகளிடம்
வண்ணம் தோய்க்கச் சொல்லியிருக்கிறேன்...
கற்பனைக்குள்
நான் ஊறிக் கிடக்கும்போது.....
சிலந்திகள்
இழைகளைப் பின்னிக் கொண்டிருக்கும்.....
அற்புதமான இந்த ஆடையை
நான் யாருக்குப் பரிசளிக்க?
பசியோடு கழன்றெரியும் வயிறொன்று
அதை எரித்துவிட்டு நகர்கிறது...
நான் இப்போதுதான் உண்மையான
கவிதையொன்றை நெய்யப் போகிறேன்.
- மு.முகமது பாட்சா*
27/05/2019
No comments:
Post a Comment