பாவத்திற்கு தண்டனை - ரமலான் 15

கடலின் உப்பு கண்ணீரிலே
உலையின் கொதிப்பு வயிற்றினிலே
உறக்கம் தொலைத்த பசியின் முனகல்
ஆட்சியாளன் அழுகலிலே...
மிதக்கும் துயரம் அடித்துப் போக
அழுகை கீதம் பாடும் தாயவள்...
அருகில் வந்த உமர் ரலியின் கண்கள்
மிதக்கும் வரியில் கரைந்திளகிட
தாயிடம் காரணம் கேட்டார்
உடன் வந்த தோழர் அஸ்லம் அவர்கள்...
பசியின் கீதம் பரவும் நாட்டில்
உங்கள் கலீபா உமருக்கு
பஞ்சணை தூக்கம் தேவையாயிருக்கும்...
வெறுப்புடன் விழுந்த தாயின் வார்த்தைகளைப்
பொறுப்புடனே பொறுக்கி
அல்லாவிற்குக் கொடுத்தார்
தவ்பா கேட்ட உமர் ரலி ஹன்ஹூ
நெருப்புடன் உறவாடும் பசியினை அணைக்க
பைத்துல்மால் உணவினைத்
தூக்கிச் சுமந்தார் வலிகளும் சிவக்க
தோழர் அஸ்லம் அடி பணிந்து கேட்டும்
மறுத்திட்ட கலீபா,
'மறுமை நாளின் மஹஷரின் கணக்கில்
என் பாவம் முழுவதையும் நீயாச் சுமப்பாய்?
பொறுப்பின்றி நடப்பவன்
கலீபா என்றாலும் இறைவன் வெறுப்பின்றி
நடக்க இதுவே தண்டனை' என்றார்.
- மு.முகமது பாட்சா*
21/05/2019

கடலின் உப்பு கண்ணீரிலே
உலையின் கொதிப்பு வயிற்றினிலே
உறக்கம் தொலைத்த பசியின் முனகல்
ஆட்சியாளன் அழுகலிலே...
மிதக்கும் துயரம் அடித்துப் போக
அழுகை கீதம் பாடும் தாயவள்...
அருகில் வந்த உமர் ரலியின் கண்கள்
மிதக்கும் வரியில் கரைந்திளகிட
தாயிடம் காரணம் கேட்டார்
உடன் வந்த தோழர் அஸ்லம் அவர்கள்...
பசியின் கீதம் பரவும் நாட்டில்
உங்கள் கலீபா உமருக்கு
பஞ்சணை தூக்கம் தேவையாயிருக்கும்...
வெறுப்புடன் விழுந்த தாயின் வார்த்தைகளைப்
பொறுப்புடனே பொறுக்கி
அல்லாவிற்குக் கொடுத்தார்
தவ்பா கேட்ட உமர் ரலி ஹன்ஹூ
நெருப்புடன் உறவாடும் பசியினை அணைக்க
பைத்துல்மால் உணவினைத்
தூக்கிச் சுமந்தார் வலிகளும் சிவக்க
தோழர் அஸ்லம் அடி பணிந்து கேட்டும்
மறுத்திட்ட கலீபா,
'மறுமை நாளின் மஹஷரின் கணக்கில்
என் பாவம் முழுவதையும் நீயாச் சுமப்பாய்?
பொறுப்பின்றி நடப்பவன்
கலீபா என்றாலும் இறைவன் வெறுப்பின்றி
நடக்க இதுவே தண்டனை' என்றார்.
- மு.முகமது பாட்சா*
21/05/2019
No comments:
Post a Comment