சொற்கள் - ரமலான் 22

சொற்களை
இறைத்து விடாதீர்கள்
அவை மக்காத குப்பைகளாக
மனதிற்கு அடியில் தங்கிவிடும்...
நல்ல சொற்கள் மட்டுமே
நலவிற்கு உகந்ததாகச்
சுவனத்தில் ஏற்றப்படுகிறது...
புறம் பேசும் சொற்களில்
புழுக்கள் மட்டுமே வாழுகின்றன...
அகம் கழுவுவதற்கு
அழகான சொற்களே பன்னீராகும்...
கோபத்தில் உதிரும் சொற்கள்
முகத்தை எரித்து விடுகிறது....
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ற சொல்லில் வாழ்கிறது
சாந்தியும் சமாதானமும்...
பூக்களைக் கொடுத்துவிட்டு
கைகளைக் குலுக்குவது போல்
புன்னகையைப் பரிசளியுங்கள்...
முஹபத் இல்லாத சொற்கள்
தர்த் என்ற கிணற்றில்
தினம் உயிருக்காகப் போராடும்...
மறையோதுவதும்
மனதைச் சாந்தியில் சங்கமிக்கத்தான்
சகதியைப் பூசிக்கொண்டால்
சாத்தானின்
வார்த்தைகள் சந்தம் கொள்ளும்...
சொற்களை
இறைத்து விடாதீர்கள்
அவை மக்காத குப்பைகளாக
மனதிற்கு அடியில் தங்கிவிடும்..
(முஹபத் - அன்பு , தர்த் - சோதனை)
- மு.முகமது பாட்சா*
30/05/2019

சொற்களை
இறைத்து விடாதீர்கள்
அவை மக்காத குப்பைகளாக
மனதிற்கு அடியில் தங்கிவிடும்...
நல்ல சொற்கள் மட்டுமே
நலவிற்கு உகந்ததாகச்
சுவனத்தில் ஏற்றப்படுகிறது...
புறம் பேசும் சொற்களில்
புழுக்கள் மட்டுமே வாழுகின்றன...
அகம் கழுவுவதற்கு
அழகான சொற்களே பன்னீராகும்...
கோபத்தில் உதிரும் சொற்கள்
முகத்தை எரித்து விடுகிறது....
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ற சொல்லில் வாழ்கிறது
சாந்தியும் சமாதானமும்...
பூக்களைக் கொடுத்துவிட்டு
கைகளைக் குலுக்குவது போல்
புன்னகையைப் பரிசளியுங்கள்...
முஹபத் இல்லாத சொற்கள்
தர்த் என்ற கிணற்றில்
தினம் உயிருக்காகப் போராடும்...
மறையோதுவதும்
மனதைச் சாந்தியில் சங்கமிக்கத்தான்
சகதியைப் பூசிக்கொண்டால்
சாத்தானின்
வார்த்தைகள் சந்தம் கொள்ளும்...
சொற்களை
இறைத்து விடாதீர்கள்
அவை மக்காத குப்பைகளாக
மனதிற்கு அடியில் தங்கிவிடும்..
(முஹபத் - அன்பு , தர்த் - சோதனை)
- மு.முகமது பாட்சா*
30/05/2019
No comments:
Post a Comment