ஒமர் கய்யாம் - ரமலான் 12

ஒமர்கய்யாம்
ஒரு கோப்பையைக்
கையில் வைத்துக் கொண்டு
கவிதைகளோடு சல்லாபிக்கிறான்...
ரொட்டித்துண்டுகளும்
கூடவே ஓரழகியும் தேவைப் படுகிறது...
குயவனின் மண் பாத்திரங்கள்
களி மண் மூளையில் உழல்கின்றன
இடம் மாறினாலும்
இடறினால் உடைந்துவிடுமென
உறுதியாக நம்புகிறான்...
சதுரங்கக் காய்கள் நகர்கின்றன
ஒன்றையொன்று வெட்டி
கபர்குழிக்குள் விழுந்துவிடுகிறது...
மூலையில் ஓரம் கட்டுவதுதான் வாழ்க்கை
ஆட்டம் முடிந்ததும் பெட்டிக்குள்
எல்லாக் காய்களும் அடக்கம்...
'புரியாதவன் மனிதன்'
புரிந்ததாகச் சொல்பவன் சொல்கிறான்...
ஒமர் கய்யாம் ஒரு குடிலோலன்.
- மு.முகமது பாட்சா*
18/05/2019

ஒமர்கய்யாம்
ஒரு கோப்பையைக்
கையில் வைத்துக் கொண்டு
கவிதைகளோடு சல்லாபிக்கிறான்...
ரொட்டித்துண்டுகளும்
கூடவே ஓரழகியும் தேவைப் படுகிறது...
குயவனின் மண் பாத்திரங்கள்
களி மண் மூளையில் உழல்கின்றன
இடம் மாறினாலும்
இடறினால் உடைந்துவிடுமென
உறுதியாக நம்புகிறான்...
சதுரங்கக் காய்கள் நகர்கின்றன
ஒன்றையொன்று வெட்டி
கபர்குழிக்குள் விழுந்துவிடுகிறது...
மூலையில் ஓரம் கட்டுவதுதான் வாழ்க்கை
ஆட்டம் முடிந்ததும் பெட்டிக்குள்
எல்லாக் காய்களும் அடக்கம்...
'புரியாதவன் மனிதன்'
புரிந்ததாகச் சொல்பவன் சொல்கிறான்...
ஒமர் கய்யாம் ஒரு குடிலோலன்.
- மு.முகமது பாட்சா*
18/05/2019
No comments:
Post a Comment