புழுக்கம் - ரமலான் 21

இல்லாத ஒன்றுக்குள்
இருப்பதாய் ஒன்று நுழைவது போல்
எழுதாத
பேனாவை வைத்துக் கொண்டு
எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாய்!
கைகளை விரித்து நடக்கிறவனுக்கு
ஆகாயம் கூரையாகிறது..
கூரைக்குள் பதுங்கி கொண்ட தேரைக்கு
பாம்பும் பயமாகிறது...
சன்னலைத் திறந்து விட்டு உறங்கினாலும்
கதவைப்
பூட்டிக் கொண்டு தூங்குகிறோம்...
புழுக்கம் அதிகமாகி விட்டது
புல்லாங்குழல் இசைக்குக் காற்று அவசியம்
மகரந்த சேர்க்கைக்காகத்தான்
மலர்கள் மலர்கின்றன...
பாங்கின் ஓசை அழகாய் எழும்புகிறது
பள்ளிவாசல்கள் மலர்கின்றன...
சுகந்தம் வரவில்லையென்றால்
சுய பரிசோதனை செய்து கொள்.
- மு. முகமது பாட்சா*
29/05/2019

இல்லாத ஒன்றுக்குள்
இருப்பதாய் ஒன்று நுழைவது போல்
எழுதாத
பேனாவை வைத்துக் கொண்டு
எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாய்!
கைகளை விரித்து நடக்கிறவனுக்கு
ஆகாயம் கூரையாகிறது..
கூரைக்குள் பதுங்கி கொண்ட தேரைக்கு
பாம்பும் பயமாகிறது...
சன்னலைத் திறந்து விட்டு உறங்கினாலும்
கதவைப்
பூட்டிக் கொண்டு தூங்குகிறோம்...
புழுக்கம் அதிகமாகி விட்டது
புல்லாங்குழல் இசைக்குக் காற்று அவசியம்
மகரந்த சேர்க்கைக்காகத்தான்
மலர்கள் மலர்கின்றன...
பாங்கின் ஓசை அழகாய் எழும்புகிறது
பள்ளிவாசல்கள் மலர்கின்றன...
சுகந்தம் வரவில்லையென்றால்
சுய பரிசோதனை செய்து கொள்.
- மு. முகமது பாட்சா*
29/05/2019
No comments:
Post a Comment