
எல்லோருக்குள்ளும்
40 திருடர்களின் குகையொன்று இருக்கிறது....
அவரவர் உத்திரவிடும் போது
அது திறந்து கொள்கிறது....
அதற்குள் அலிபாபா நுழைவதைக்
கண்காணிக்க முடியாது...
எல்லோரிடமும்
ஓர் அலாவுதீனின் விளக்கிருக்கிறது...
ஆலம்பனா எனக் கைக்கட்டி நிற்பது
கொழுந்துவிட்டுயரும் பூதம்...
சிந்துபாத்
லைலாவைத் தேடிக் கொண்டிருக்கிறான்
மூஸாவின் மந்திரம்
தோற்றுக் கொண்டேயிருக்கிறது....
செகர்சதா தன் கதைகளை
நீட்டித்துக் கொண்டே போகிறாள்.....
சாரியரின் இரவுகள்
விழித்துக் கொண்டே இருக்கின்றன.
- மு. முகமது பாட்சா*
29/05/2019
No comments:
Post a Comment