மிதக்கும் துவா - ரமலான் 17

நிறையத் துவாக்கள் அந்தகார
அந்தரத்தில் தொங்குவதாக
ஒரு நாடோடிக் கவிஞன்
பாடிக் கொண்டே செல்கிறான்...
பள்ளிவாசல்களை விட்டு
இன்னமும் சில துவாக்கள்
வெளியேறவில்லையென்று
சூஃபி ஞானி சொல்லியழுகிறார்...
கையேந்திக் கேட்ட துவாக்கள்
அந்தகாரத்தில் எப்படி மிதக்க முடியும்?
சூஃபி ஞானியிடம் கேட்டேன்...
சுயம் போர்த்திய துவாக்களை
இறைவன் சோதனைக்குப் பின்பே
எடுத்துக் கொள்கிறானாம்...
மகஷரின் வெப்பம்
போர்த்தப் பயந்த துவாக்கள்
அர்ஷிற்கு அருகில்
அழுகையுடன் காத்திருக்கிறதாம்
அடுத்தவருக்காகவும் மனம் உருகிக்
கேட்கின்ற துவாக்களில்தான்
நமது துவாவும்
அடியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக
சொல்கிறார் அறிவார்ந்த ஞானி...
உண்மைதான்...
இன்னமும் நிறையத் துவாக்கள்
அந்தகார அந்தரத்தில்தான்
தொங்கி அலைக்கழிகின்றன...
- மு.முகமது பாட்சா*
24/05/2019

நிறையத் துவாக்கள் அந்தகார
அந்தரத்தில் தொங்குவதாக
ஒரு நாடோடிக் கவிஞன்
பாடிக் கொண்டே செல்கிறான்...
பள்ளிவாசல்களை விட்டு
இன்னமும் சில துவாக்கள்
வெளியேறவில்லையென்று
சூஃபி ஞானி சொல்லியழுகிறார்...
கையேந்திக் கேட்ட துவாக்கள்
அந்தகாரத்தில் எப்படி மிதக்க முடியும்?
சூஃபி ஞானியிடம் கேட்டேன்...
சுயம் போர்த்திய துவாக்களை
இறைவன் சோதனைக்குப் பின்பே
எடுத்துக் கொள்கிறானாம்...
மகஷரின் வெப்பம்
போர்த்தப் பயந்த துவாக்கள்
அர்ஷிற்கு அருகில்
அழுகையுடன் காத்திருக்கிறதாம்
அடுத்தவருக்காகவும் மனம் உருகிக்
கேட்கின்ற துவாக்களில்தான்
நமது துவாவும்
அடியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக
சொல்கிறார் அறிவார்ந்த ஞானி...
உண்மைதான்...
இன்னமும் நிறையத் துவாக்கள்
அந்தகார அந்தரத்தில்தான்
தொங்கி அலைக்கழிகின்றன...
- மு.முகமது பாட்சா*
24/05/2019
No comments:
Post a Comment