Thursday, 23 November 2017

நான் இரசித்த கவிதைகள் - 96



நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை 
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட 
உயரமாய்
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை 
அழைக்கிற காற்று
.
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச் நச் என்று 
ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும் 
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப்போனவை
.
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
.
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக 
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி
எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்
.
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது
.
கவிதாயினி ஊர்வசி

No comments:

Post a Comment

Popular Posts