Sunday, 26 November 2017

பார்வைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தவறாக உணர்கிறாயா? 
நீ எங்கிருக்கிறாயென்பது உனக்குத் தெரியுமா? 
கடற்கரை நம்மைச் சுவாசிக்கிறது... 
கைகளைக் கை விட்டுவிடாதே 
அவை கவிதையெழுதிக் கொண்டிருக்கின்றன.

கண்களைக் கழற்றி வைத்துவிட்டு 
யாருமிங்கே நடக்க முடியாது... 
அவர்களின் பார்வை பார்வைகள் மட்டும்தான் 
காதல் இங்கே பூத்திருக்கிறது 
வாசனைகளின் வாசற்கதவு நம்மை வரவேற்க.

எல்லைகளை இடைவெளியில் வைத்திருக்கிறோம் 
பார்வைகளின் ஊடுருவலை யார் தடுப்பது? 
மாயையின் பிரமைகள்தான் எல்லைகள் 
மனதின் மொழிகளை மொழி பெயர்க்க முடியாது 
மனவலைகளில் கால் நனைக்கிறது காதல்.

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts