Saturday, 4 November 2017

தீர்ப்புகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

குற்றவாளி கூண்டில் 
நிற்க வைக்கப் பட்ட உண்மைகள் , 
தலை குனிந்து நின்றன. 

பொய்கள் 
கருப்பு அங்கிகளை அணிந்திருந்தது 

நீதி தேவனின் இரண்டு கண்களிலும் 
சீழ் வடிந்து கொண்டிருக்க , 
நீதி தேவதை 
தன்னைத் தானே சிதைத்துக் கொண்டிருந்தாள் ! 

குற்றப் பத்திரிக்கைகளை வாசிக்க, 
யாருக்குமே நேரமில்லை ! 
அத்தனை தாள்களுமே , அவசரத்தில் 
எழுதப் படாமல் இருந்தன . 

உண்மைக்காக வாதாட 
யாருமே வரவில்லை 

தீர்ப்புகள் 
அவசரமாய் வாசிக்கப் படுகின்றன , 
உண்மைகளின் 
மூன்று புலன்களுக்கும் 
மூடி முத்திரை வைக்க வேண்டுமென்று . 

நீதி தேவனின் எழுதுகோல் 
உடைக்கப் படுகின்றது ,
தீர்ப்பின் மையில் 
உண்மைகளின் இரத்த மாதிரிகள் ! 

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts