
இரவின் வானம் நீள்கிறது
இடையுறுத்தும் அவன் நினைவுகள்
தலைக் கீழாய்ப் பறக்கின்றன,
யாக்கையின் சன்னல்கள்
திறந்தே கிடக்கின்றன
நொம்பலம் நோவினை செய்து
கொத்துகின்றன
வயிற்றினில் ஒரு தீ பற்றியெரிய
சுவாசத்தின் காற்றுச் சுகமிழக்கிறது...
சொப்பனங்களைத் தொலைத்த இரவினை
நான் இப்போதுதான் பார்க்கிறேன்,
இடை நிறுத்தமில்லா பார்வையின் வீச்சில்
நீ பட்டுவிட மாட்டாயா?
பகலையும் நீ இரவாக்கி விடாதே...
பாவியிவள் பைத்தியக்காரியென்றே
பார்வைகளெல்லாம் பேசக் கூடும்,
இடை நழுவும் என் ஆடைகளின் கதை
அவற்றிற்கு என்ன தெரியும்?
பசலைக்காரி பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பார்வையில் நீ பட்டுவிடு
அல்லது பாழுடலையாவது அள்ளிச்சென்று
புதையிலிடு!
- மு.முகமது பாட்சா*
ஓவியம் : பொன்வண்ணன் அவர்கள்
-
No comments:
Post a Comment