
நானென்பது
ஒரு கவிதையாக இருக்கலாம்
அல்லது
நாயனத்தின் துளைகளாகவும் இருக்கலாம்
வாசிக்கப் படும் வரை
வண்ணங்களுக்குள் நான் மறைந்திருக்கலாம்
வானவில்லிற்குள் என்னைத் தேடிப் பார்க்கலாம்
மின்னல்கள் வந்து நிறம் பிரிக்கும் வரை,
நிழலென்பது நானாகவும் இருக்கலாம்
நிஜம் என்பது பொய்யாகவும் இருக்கலாம்
நான் இறக்கும் வரை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment