Saturday, 18 November 2017

நீ கொடுத்த பரிசு




நீ வீசி யெறிந்து 
உடைத்த 
கண்ணாடி கோப்பையின் 
சிதறல்களில் 
என் மனமும்... 
சிதறிக் கிடப்பதை அறிவாயா? 
கோப்பையின் சிதறல்களில் 
நீ வீசிய வார்த்தைகளும் 
ஒட்டிக் கொண்டு... 
எதைக் கூட்டி , எதை 
குப்பையில் போட போகிறாய்? 
உடைத்த கோப்பையில் 
என் நேசமும் 
உன் பாசமும் ஒட்டி யிருந்ததை 
அறிவாயா? 
உனக்கு 
வெறும் கோப்பையாகத் தெரிந்தது 
எனக்கு 
நம் காதலாகத் தெரிந்தது! 
நீ மறந்து விட்டாய்.... 
....அதுதான் நீ கொடுத்த முதல் பரிசு!.....

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts