
நீ வீசி யெறிந்து
உடைத்த
கண்ணாடி கோப்பையின்
சிதறல்களில்
என் மனமும்...
சிதறிக் கிடப்பதை அறிவாயா?
கோப்பையின் சிதறல்களில்
நீ வீசிய வார்த்தைகளும்
ஒட்டிக் கொண்டு...
எதைக் கூட்டி , எதை
குப்பையில் போட போகிறாய்?
உடைத்த கோப்பையில்
என் நேசமும்
உன் பாசமும் ஒட்டி யிருந்ததை
அறிவாயா?
உனக்கு
வெறும் கோப்பையாகத் தெரிந்தது
எனக்கு
நம் காதலாகத் தெரிந்தது!
நீ மறந்து விட்டாய்....
....அதுதான் நீ கொடுத்த முதல் பரிசு!.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment