
எங்காவது ஓரிடத்தில்
ஏதாவது ஒன்றை
தொலைத்து விட்டுதான்
நிற்கிறோம்!
பால் குடித்த மடியை
தூங்க வைத்த தூளியை
தூக்கிச் சுமந்தத் தோளை
அரை டவுசர் நாட்களை
சின்ன சின்ன
சில்மிஷங்களை!
காதல் சொன்னப் பெண்ணை
கவிதைச் சொன்னக் காதலியை
எத்தனை? எத்தனை?
ஆண்டிற்கு ஒரு முறை
நம் வயதையும் சேர்த்துதான்!
- மு.முகமது பாட்சா
30/11/2015
No comments:
Post a Comment