
கனவுகளை பொறுக்கிக் கொண்டிருந்தவன்
நிஜங்களை தேடிக் கொண்டிருந்தான்
வெளிச்சம் கிடைக்காத ஏக்கம்
பார்வையைப் போர்த்தியிருந்தது
'வாழ்க்கையின் சூனியத்தில், தான்
வசமாய் மாட்டிய சிலந்தியென்று'
பாட ஆரம்பித்தான்
தூங்கிக் கொண்டிருந்த சூஃபிக் கிழவன்
அவனைப் பார்த்து சிரித்தான்
'வேதனையெல்லாம் வேடிக்கை' என்று
அவன் மீண்டும் பாடினான்.
நீ எதைத் தேடுகிறாய் என்றான் கிழவன்
வெளிச்சத்தை என்றவன் வேதனையில் சிரித்தான்
நீயே வெளிச்சம்
உனக்கெதற்கு வெளிச்சம் என்ற கிழவனை
நீயொரு பைத்தியம் என்றான் பாழிருட்டுக்காரன்
'பூமியில் எதுதான் வெளிச்சம் ?'
'சூரியன்' என்றான் நிலவு என்றான், விளக்கு என்றான்
'கண்ணை மூடினால் காணாமல் போவதா வெளிச்சம்?
கண்களைத் திறந்துவை
நீயேதான் வெளிச்சம்' என்ற கிழவன்
அவன் கண்களை விட்டு நகர்ந்து கொண்டிருந்தான்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment