Sunday, 26 November 2017

ஆப்பிள்


தானியங்கு மாற்று உரை இல்லை.

'ஆப்பிள்' என்று எழுதிப் பார்த்தேன்,
மரமொன்று முளைத்திருந்தது !

கனிகளைக் காணவில்லை !

களவாடிச் சென்ற மந்திகளின் கூட்டத்தில்
என் ஆசை குரங்கும் அமர்ந்திருந்தது !

சுவை தேனென்றுதான் சுவைத்தேன்,
சுவையற்ற அப் பழங்களை ,

தின்று துப்பிய விதைகளில்
துளிர்விட்ட கன்றுகளை
காப்பாற்றி விடத்தான் 
வேலிகளும் போட்டேன்,

அத்துமீறி நுழைந்த ஆடொன்று
அத்தினையையும் மேய்ந்து விட்டது !

துளிர்த்தக் கண்ணீரை
துடைத்துக் கொள்ள எடுத்தத் தாளில்,
இப்படிதான் எழுதியிருந்தது,

'ஆப்பிள்'

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts