
'ஆப்பிள்' என்று எழுதிப் பார்த்தேன்,
மரமொன்று முளைத்திருந்தது !
கனிகளைக் காணவில்லை !
களவாடிச் சென்ற மந்திகளின் கூட்டத்தில்
என் ஆசை குரங்கும் அமர்ந்திருந்தது !
சுவை தேனென்றுதான் சுவைத்தேன்,
சுவையற்ற அப் பழங்களை ,
தின்று துப்பிய விதைகளில்
துளிர்விட்ட கன்றுகளை
காப்பாற்றி விடத்தான்
வேலிகளும் போட்டேன்,
அத்துமீறி நுழைந்த ஆடொன்று
அத்தினையையும் மேய்ந்து விட்டது !
துளிர்த்தக் கண்ணீரை
துடைத்துக் கொள்ள எடுத்தத் தாளில்,
இப்படிதான் எழுதியிருந்தது,
'ஆப்பிள்'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment