Monday, 27 November 2017

புள்ளிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

புள்ளிகள் 
கோடுகளாக மாறியப் பின்பு 
கோடாரிகளாகவும் 
மாறிவிடுகிறது ! 

புள்ளிகளுக்குள் இருக்கும் 
புள்ளிகளை 
அழிப்பான்கள் கூட 
அழிப்பதில்லை !

புள்ளிகளே 
கோள்களாகவும் 
மாறிவிடும் அபாயம் உண்டு ! 

ஒற்றைப் புள்ளியிலிருந்துதான் 
விரிகிறது இந்த உலகம், 
கூடவே,  பிரச்சனைகளும் ! 

புள்ளிகள்தானே என்று 
புறம் தள்ளிவிடாதீர்கள்...

காற்புள்ளிகளாய் மாறி, 
கேள்விக்குறிகளாகவும் 
கேள்வி கேட்கத் தொடங்கிவிடும் ! 

ஆச்சரியக் குறிகள் 
அப்போது 
ஆயுதம் எடுக்கத் தொடங்கி விடலாம் ! 

புள்ளிகளே, இல்லாத கோலங்கள் 
எப்போதுமே, 
அழகாக இருப்பதில்லை ! 

முக்கியப் புள்ளிகளென்று 
சுற்றித் திரிபவர்களில், 
முக்கால்வாசிப் பேர் 
முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் ! 

இவர்களின் பின்னால் 
சுற்றித் திரியும் செய்வினைகள் 
இல்லையென்றால் 
இவர்களெல்லாம் 
வெறும் எச்சங்களாகி
மிச்சங்களாகிக் கிடப்பார்கள் ! 

புள்ளிகள்தானே, 
என்று ,புறம் தள்ளி விடாதீர்கள், 
புள்ளிகள்தான், 
பரிமாணங்களின் ஆரம்பமும் கூட !

- மு.முகமது பாட்சா
27/11/2016
ஓவியம் : முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts