
என்னருகில்தான் நீயிருக்கிறாய்
நான்தான் உனைத் தேடுகிறேன்
இதயத்தின் கண்கள் மூடியே கிடக்கின்றன!
சிறு சிறு மழைத் துளிகளில்
நதிகள் பெருக்கெடுக்கின்றன
கருணை கடலில் கலக்கிறது!
பட்ட மரம் துளிர்க்கிறது
பறவைகள் கூடு திரும்புகின்றன
வேர்களின் ஈரம் காயவேயில்லை
சிறகுகளைக் கழற்றி வைக்கிறேன்
பறவைகள் வானில் பறக்கட்டும்
பூமியே எனக்கொரு வானம்
புன்னகையைத் தொலைக்காதீர்கள்
பூக்கள் அங்குதான் பூக்கின்றன
வசந்த காலம்
வார்த்தைகளில் உட்கார்ந்திருக்கிறது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment