Friday, 17 November 2017

நிராசை பயிர்கள்

அடிமை மனிதர்கள் க்கான பட முடிவு

கோடிட்ட இடங்கள்
நிரப்பப் படாமல் அப்படியே இருக்கின்றன
கோடுகள் மட்டும் 
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
இரைந்து கிடந்த எழுத்துகளெல்லாம்
வாக்குறுதிகளாக மட்டும் ஜொலிக்கின்றன
கோபங்களை புதைத்தவிடத்தில்
கள்ளிச் செடிகள் முளைத்து நிற்க....
கனவுகளாய் விரிந்த நிராசைகளை
புறாக்களின் கால்களில் கட்டிப் பறக்க விடுகிறோம்
புத்தனின் கொண்டை
எங்களின் ஒவ்வொருவருக்குள்ளும்
முளைத்திருப்பதாய் அகிம்சை போர்த்திக் கொள்கிறோம்
கால்களை வெட்டிச் சென்றவர்கள்
நாங்கள்  நடப்பதற்குப் பயிற்சி அளிக்கிறார்கள்
போதி மரத்தினில் தொங்கும் விழுதுகளில்
கழுத்தின் கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன
அண்ணாந்து பறக்கும் நம் தேசியக் கொடி
சற்று குனிந்து பார்த்தால் நன்றாக இருக்கும்

- மு.முகமது பாட்சா*





No comments:

Post a Comment

Popular Posts