Monday, 27 November 2017

மாதேறிகள்


தானியங்கு மாற்று உரை இல்லை.

மாவெறி விலங்குகள் 
உலா வருகின்றன! 
இரண்டு கைகள் 
இரண்டு கால்கள்தான் 
இருப்பதாகச் சொல்கிறார்கள்! 
மத வெறிகள் சுமந்துத் திரியும் 
மாதேறிகளாம் இவை! 
பள்ளி வாசல்கள் முன்பாக 
சர்ச்சுகள் முன்பாக 
கோவில்களின் ஊடாகக் கூட 
இவைகள் திரியுமாம்...
இறைஞ்சுகின்ற 
கைகளுக்குப் பின்னால் 
குருதியின் ருசிப் பார்க்கும் 
வெட்டரிவாள் விரல்களாய் 
ஒளிந்திருக்குமாம்!
பேச்சுகளின் ஊடே 
உதிரத்தின் வாடை 
சற்றே 
வீசும் என்றே சொல்கிறார்கள்! 
எச்சரிக்கைத் தேவை! 
மனிதர்களில் கலந்துவிடாது
காத்துக் கொள்ள 

- மு. முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts