Monday, 16 April 2018

நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

ஐந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுகளையும்
பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் கொடுத்த
கண்ணம்மா கிழவி
பேரனின் தலையைத் தடவிக்கொண்டே சொன்னாள்
என் பொணத்தை எடுக்க
யாருகிட்டேயும் கையேந்திடாதே!
சரியென்றழுத 
பேரனின் கண்ணீருக்கு மட்டுமேத் தெரியும்
அவை  எப்போதுமே செல்லாதென்று!

-மு. முகமது பாட்சா*
16 /04 /2018

No comments:

Post a Comment

Popular Posts