
நான்
சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்...
எனக்கான தூக்கத்தை
யாரும் கெடுத்து விடாதீர்கள் !
ஆசையைத் துறந்த எனக்கு
தூக்கத்தை
துறக்கத் தெரியவில்லை !
தூங்கும்போது - நான்
தியானிப்பதாகவே...
பொய்ச்சொல்லிக் கொள்கிறேன்!
குடும்ப வாழ்வை நேசித்த வரை
தூக்கத்தைத் தொலைத்திருந்தேன்!
ஆசையைத் துறந்த பிறகுதான்
தூக்கம் நிம்மதியாக வருகிறது!
ஆசையில் தூக்கம் அடங்குமா?
தெரியவில்லை ! - ஆனாலும்
தூங்கிதான் ஆக வேண்டும்
ஒரேடியாகத் தூங்கும் வரை!
- மு.முகமது பாட்சா*
05/04/2016
No comments:
Post a Comment